இலங்கையில் பதிவான 4 மாத குழந்தைக்கு கொரோனா இல்லை!

இலங்கையில் பதிவாகிய மிகவும் குறைந்த வயதுடைய சிசுவுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குருநாகல், நாத்தண்டிய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது.

அந்த குடும்பத்தில் 4 மாதக் குழந்தைக்கும் கொரோனா ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனைவரும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் கடந்த 30ம் திகதி அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் குழந்தைக்கு தொற்று ஏற்படவில்லை என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஏனைய 4 பேரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

You May also like