தேர்தல் எப்போது? மஹிந்த தேசப்பிரிய அதிரடி பதிவு!

பொதுத் தேர்தல் எப்போது என்கிற கேள்விக்கு தன்னிடம் பதில் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கின்றார்.

தனது உத்தியோகபூர்வ முகநூலில் அவர் இன்று திங்கட்கிழமை இவ்வாறு கூறியிருக்கின்றார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை அனுப்பி, மே 28ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த தன்னால் உடன்பட இயலாது என்பதைத் தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில் கருத்து வெளியிட்டிருக்கும் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் திகதிகுறித்து பேச அனைவரும் இணைய வேண்டும் என்றுள்ளார்.

தாம் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பாதுகாப்பே முதலிடம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You May also like