ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா: இந்தியாவில் பலி தொகை 592!

இந்தியாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இதன்படி சற்றுமுன் வரை இந்தியாவில் 592 பேர் உயிரிழந்துள்ளனர். 18000க்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்தியாவில் மொத்தம் 53 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

You May also like