414ஆக எகிறிய கொரோனா நோயாளர்கள்: இன்று மட்டும் 41 பேர்!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 414ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாலை 6 மணிவரையான பதிவுகளின்படி கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை பகுதியிலிருந்து 11 கொரோனா நோயாளர்களும், கம்பஹா – வெலிசற கடற்படை முகாமிலிருந்து 30 கொரோனா நோயாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினமே அதிகமான கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இன்று இனங்காணப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 41ஆகும்.

You May also like