இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதை தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வியடைந்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது.
கண்டியில் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குப் பேசிய அக்கட்சியின் முன்னாள் எம்.பி லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தொற்று பரிசோதனைகளை நாம் கூறியபடியும், உலக சுகாதார ஸ்தாபனம் கூறியபடியும் இப்போதாவது அதிகரிக்கும்படி அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.