மஹிந்தவின் கூட்டத்தை பகிஸ்கரிக்கும் பிரதான கட்சிகள்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை மறுதினம் திங்கட்கிழமை நடைபெறும் கூட்டத்தை பகிஸ்கரிக்க பல கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இதன்படி சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முன்னாள் அமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தோட்ட தொழிலாளர் சங்கம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனின் மலையக மக்கள் முன்னணி, முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி என்பன இக்கூட்டத்திற்கு செல்வதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

 

You May also like