எதிர்வரும் 11ஆம் திகதி ஊரடங்கைத் தளர்த்துவது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்று முற்றாக ஒழிந்துவிட்டது என்று யாரும் எண்ணிவிடக்கூடாது என்றும் குறிப்பிட்ட அவர், ஓரளவுக்கு கட்டுப்படுத்திவிட்டோம் என்பதே நிதர்சனம் எனவும் கூறினார்.