திருப்பி அடிக்கும் ராஜித: பிணை மறுப்பை நிராகரிக்கும்படி மனு!

தனக்கு வழங்கப்பட்ட பிணை அனுமதியை இரத்து செய்த கொழும்பு மேல் நீதிமன்றின் உத்தரவை இரத்து செய்யும்படி கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று வியாழக்கிழமை மேன்முறையீடு செய்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.பி ராஜித தற்போது விளக்கமறியல் பாதுகாப்பில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

தனது சட்டத்தரணி ஊடாக அவர் இன்று இந்த மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கின்றார்.

You May also like