முகமாலை பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்களை அகழும் பணிகள் இடம்பெற்றுள்ளன.
கிளிநொச்சி பளை முகமாலை பகுதியில் கடந்த 22 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழும் பணிகள் தற்போது கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணபராஜா முன்னிலையில் இடம்பெற்றது.
அதன்படி இன்று பிற்பகல் இரண்டு மணி தொடக்கம் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகிறது. இன்று (26) மாலை வரை மூன்று துப்பாக்கிகள் மற்றும் விடுதலைப்புலிகளின் சீருடை என்பன காணப்பட்டுள்ளன.
இவை தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவரின் மனித எச்சங்களாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.