இராணுவத்தினருக்கும் கொரோனா: வெளியே செல்லாத வகையில் தடுப்பு தீவிரம்!

இராணுவத்தினரிடம் இருந்து வெளிநபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாத வகையில் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 10 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் இராணுவச் சிப்பாய் என்பதோடு மற்றைய நபர் பெலாரஸ் நாட்டிலிருந்து நாடு திரும்பியவர்.

இன்னும் இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இராணுவச் சிப்பாய்கள் இருவருக்கு நெருக்கமானவர்கள்.

இந்நிலையில் படைச் சிப்பாய்களிடத்தில் இருந்து வெளிநபர்களுக்கு தொற்று பரவுவதை தடுப்பதற்கான முயற்சிகள் அனைத்தும் தற்போது முடுக்கிவிடப்பட்டிருப்பதாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகின்றார்.

You May also like