காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன என்பதை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும் என்று கோரி வவுனியாவில் தொடங்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்திற்கு இன்றுடன் 1200 நாட்கள் பூர்த்தியாகின்றன.
எனினும் இன்றுவரை அரசாங்கத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்று காணாமல் போனோரின் பெற்றோல் அங்கலாய்க்கின்றனர்.
இதன் காரணமாக 1200 நாள் பூர்த்தியை முன்னிட்டு வழமைபோல தாங்கள் தங்கியிருந்து சுழற்சி முறையில் நடத்திவரும் போராட்டத்தை இன்றும் நடத்தியிருக்கின்றனர்.