ஐரோப்பாவில் கொரோனா அதிகரிக்கும் சாத்தியம்; இன்று வந்த எச்சரிக்கை!

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஒருமாத காலப்பகுதிக்குள் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், Armenia, Sweden, Moldova and North Macedonia உள்ளிட்ட 11 இடங்களில்  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக  1 இலட்சத்து 95 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2.6 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like