நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 19 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்படப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 20 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 639 ஆக அதிகத்துள்ளது.