முகக்கவசம் அணியாத 162 பேருக்கு நடந்த சம்பவம்!

மேல் மாகாணத்தில் முகவுறைகளை அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை ஐந்து மணிவரையான 24 மணித்தியால காலப்பகுதியிலேயே, அவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், தொள்ளாயிரத்து ஐந்து பேர், கடுமையான எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளதாக, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் முகவுறைகளை அணியாத நபர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

You May also like