நாடாளாவிய ரீதியில் 2355 பேர் கைது.!

நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 24 மணித்தியால சுற்றிவளைப்பு நடவடிக்கையில், பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில் இரண்டாயிரத்து 355 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று நள்ளிரவு 12 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியிலேயே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, ஹெரோய்ன், கஞ்சா மற்றும் ஐஸ் போன்ற போதைப் பொருட்களும், ஆயுதங்கள் சிலவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்படி, ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் 258 பேரும்,  கஞ்சா வைத்திருந்த 219 பேரும், ஐஸ் வைத்திருந்த குற்றச்சாட்டில் 25 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், வாள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 10 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 517 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பிடியானை பிறப்பிக்கப்பட்ட 488 பேரும், வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 838 பேரும்,  இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

You May also like