கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவது தாமதமாகும் என்று சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கம்பஹா, பியகம பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வெளிநாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை வரும் 14ம் திகதி முதல் இடைநிறுத்தப்படும் அவர் குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஆகஸ்ட் 15ம் திகதி திறக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் பரவிவரும் நிலையில் சுகாதார துறையினரின் ஆலோசனை பெற்று விமான நிலையத்தை திறப்பது தாமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.