யாழில் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று இரவு இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் வீட்டின் பல பகுதிகளிலும் அதேபோல் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

-யாழ் குகன்-

You May also like