பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறையை மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பதாக கல்வியமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சிறந்த தினமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள கல்வியமைச்சு, அந்த திகதியில் 11,12,13ஆம் தர மாணவர்கள் மட்டும் பாடசாலைகளுக்கு திரும்பலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
—