ரிஷாட்டை கைது செய்ய முஸ்தீபு; நாளை விசாரணைக்கும் அழைப்பு!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை மீண்டும் நாளை காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குண்டுதாரி இன்ஷாப் அஹமட் தொடர்பிலான விவகாரம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அவசியம் ஆஜராக வேண்டுமென, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC) மேற்படி அழைப்பாணையை விடுத்துள்ளார்.

இந்நிலையில், தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூல கடிதம் ஒன்றின் ஊடாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அறிவித்திருந்த நிலையிலும், இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை கடந்த 09 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் 10 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்ட அவர், மூன்று தினங்களின் பின்னர் மீண்டும் விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரிஷாட்டை கைது செய்ய முஸ்தீபு; நாளை விசாரணைக்கும் அழைப்பு!

You May also like