வெளிநாடுகளில் கொரோனா வைரஸினால் நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையர்கள் மீண்டும் இன்று முதல் நாடு திரும்ப சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு இராஜ்யத்தில் உள்ள இலங்கையர்கள் இன்று நாடு திரும்புகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 14ம் திகதி வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் செயற்பாடு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த நடவடிக்கை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.