வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

நடைபெற்றுமுடிந்த பொதுத் தேர்தலிலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள 66 வாக்குகள் எண்ணும் நிலையங்களில் இப்பணிகள் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றன.

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவுகள் மாலை 5 மணிக்கு முடிந்தன.

கொரோனா வைரஸ் அச்சத்தினால் வாக்குகள் எண்ணும் பணிகள் வரலாற்றில் முதற்தடவையாக தேர்தல் நடைபெற்ற அடுத்ததினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்குப் பின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

You May also like