ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் எந்தவொரு ஆசனத்தையும் வெற்றிகொள்ள முடியாமற் போயுள்ள நிலையில் கட்சிக்குள் தற்சமயம் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சி மூத்த உறுப்பினர்கள் அவசர சந்திப்புக்களையும் நடத்தியிருப்பதாக தகவல் கூறுகிறது.
இந்நிலையில், கட்சியின் உயர் பதவிகளை வகித்தவர்கள் இராஜினாமா செய்யவும் தீர்மானித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் கட்சியில் அவசர மறுசீரமைப்பிற்கும் ரணில் தயாராகி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.