கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்கு உள்ளாகி இருந்த 494 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மூன்று நாடுகளில் இருந்து நான்கு விமானங்கள் ஊடாக இவர்கள் மத்தல மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய, டுபாயில் இருந்து 34 பேர் எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான
E.K – 648 எனும் விமானம் ஊடாக இன்று அதிகாலை 1.12 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அதேபோன்று, தோஹாவில் இருந்து 22 இலங்கையர்கள் கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான Q.R – 668 எனும் விமானம் ஊடாக இன்று அதிகாலை 1.21 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மேலும், 288 இலங்கையர்கள் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான U.L – 26 எனும் விமானம் ஊடாக இன்று காலை 5.20 இற்கு மத்தல சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அத்துடன், ஓமான் நாட்டின் மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து 150 பேர் ஓமான் விமான சேவைக்குச் சொந்தமான O.V – 1431 எனும் விமானம் ஊடாக நேற்று இரவு 11.15 அளவில் மத்தல சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள் அனைவரும் பி. சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.