சாணி மீது விசாரணை ஆரம்பம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர இன்றைய தினம் அரசியல் பழிவாங்கல் பற்றி விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் அவரை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சியாம் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வெலிவேரிய பகுதி ஆயுத கிடங்கு விவகார விசாரணைகளில், சந்தேக நபர்களைக் கைது செய்ய புதிதாக சாட்சியங்களை உருவாக்கியமைக்காக ஷானி அபேசேகர கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like