தேசியப்பட்டியல் இரு ஆசனங்கள் வெற்றிடம்:இழுபறி நீடிப்பு

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள இரண்டு ஆசனங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு இன்னும் இழுபறி நிலைலேயே இருந்து வருகிறது.

அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் இதுவரை நியமிக்கப்படவில்லை.

அதேபோல எங்கள் மக்கள் சக்திக் கட்சியின் சார்பில் உள்ள தேசியப்பட்டியலுக்கான உறுப்பினர் இதுவரை நியமிக்கப்படவில்லை.

இவ்விரு கட்சிகளும் இறுதி முடிவை அறிவிக்கும்வரை தேர்தல்கள் ஆணைக்குழுவும் தீர்மானம் எடுக்கமாட்டாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

You May also like