நாடு முழுவதிலும் எதிர்வரும் நாட்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு பகுதிகளில் வரட்சியுடனான காலநிலை காணப்படுகிறது.
இதன் காரணமாக குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவிவருவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க தெரிவித்தார்.
இதனால் நீர்விநியோகத்தை வரையறுப்பதற்கு எதிர்பார்ப்பதால் மக்கள் அவசியான தேவைகளுக்கு மட்டும் நீரைப் பயன்படுத்தும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.