வெளிநாட்டு பல்கலை பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்ற இலங்கை மாணவர்கள் சிலர் கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்பாக இன்று பகல் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

இலங்கை மருத்துவச் சபையினால் நடத்தப்படுகின்ற மருத்துவப் பதிவுக்கான பரீட்சை நடத்தப்படாமலிருப்பதற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.

இதுகுறித்து ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தபோது, இந்த மாணவர்களுடைய பிரச்சினை மற்றும் ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் மூன்றின் பெயர் மருத்துவச் சபையின் இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து விரைவில் அந்த சபையுடன் பேச்சு நடத்துவதாக தெரிவித்தார்.

You May also like