இலங்கையில் இரு மணிநேரத்தில் ஒரு சிறுவர் துஷ்பிரயோகம்

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கும் ஒரு சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கண்டியில் நேற்று நடந்த சிறுவர்தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வு 4 மணிநேரம் நடைபெற்றாலும் இந்த மணிநேரங்களிலும் இரண்டு சிறுவர்கள் பாரதூர துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருக்கலாம். இதுதான் இந்த தீவிலுள்ள மிகப்பெரிய கொடுமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

You May also like