கொழும்பு மாநகர சபையில் தொழில்புரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இன்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோனையில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபர் புத்தளத்தைச் சேர்ந்தவர்.
இதேவேளை களுத்துறை வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் தாதிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர் பொது போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தொற்றில் பீடிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது,