யாழில் தமிழ் கட்சிகளின் கூட்டம் ஆரம்பம்- பிரதான கட்சியொன்று பகிஸ்கரிப்பு

அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம்  இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகிற ஜனநாயகத்திற்கு எதிராக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.

எனினும் இந்தக் கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி பகிஸ்கரிப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இக்கூட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வருகைதருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டத்தில் இருந்த வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் வெளிநடப்பு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான  சித்தார்த்தன், சுமந்திரன், முன்னாள் எம்.பி மாவை சேனாதிராஜா, வட மாகாண சபைத் தலைவர் சிவஞானம் ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

You May also like