குருநாகலில் மேலுமொரு பகுதி முடக்கம்

குருநாகல் மாவட்டத்தில் மேலுமொரு பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது.

இதன்படி பன்னல – எலபடகம கிராம சேவைப் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த ரணவிரு மாவத்த மறு அறிவிப்பு வரை முடக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை புதன்கிழமை அந்த பிரதேசத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட குடும்பங்களிலுள்ளவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் குறித்த பகுதியிலுள்ள 98 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அதில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அந்த வகையில் குறித்த பிரதேசத்தில் இதுவரை 4 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பதால் மேற்படி பிரதேசம் முடக்கம் செய்யப்பட்டது.

You May also like