பொம்பியோ தங்கிய ஹோட்டலில் இருவருக்கு கொரோனா?

அண்மையில் இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பில் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் பணியாற்றிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்தார்.

இந்த விடயமானது ஒருவருக்கும் தெரியாத வகையில் மறைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மந்திரிக்கப்பட்ட பிரித் நீரை கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக ஆற்றில் இட்டுவரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதனை நிறுத்திவிட்டு முதலில் அவர் பதவிவிலக வேண்டும் என வலியுறுத்தினார்.

You May also like