297 பொலிஸாருக்கு கொரோனா தொற்று

பொலிஸார் இடையே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 297ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 186 உத்தியோகத்தர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

அதேவேளை, 2400க்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் தற்சமயம் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like