ரிஸாட்டின் சிறை அருகே பலருக்கு கொரோனா தொற்று?

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஸாட் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூண்டின் இரு பக்கத்திலும் உள்ள கூண்டுகளில் இருந்து இருவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் அந்த சிறைக் கூண்டை சுத்தம் செய்யும் நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சிறைச்சாலை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ள அதிகாரிகள், அந்தப் பகுதியை தொற்றுநீக்கலுக்கு உட்படுத்திவருவதாகவும் அறியமுடிகின்றது.

You May also like