தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துதளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் இன்று கூறியுள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு பிரபாகரனுக்கு வாழ்த்து கூறினார்.
மகாவலி திட்டத்தின் எல் வலயத்தின் கீழ் வடபகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறு சிங்கள அரசாங்கத்தினால் பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிந்துதான் தலைவர் பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்ததாகவும் கூறினார்.