இந்திய தேசிய பாதுகாப்பு ஆலேசகர் இலங்கையை வந்தடைந்தார்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலேசகர் அஜித் தோவால் மற்றும் மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மாரியா அஹமட் ஆகியோர் இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இலங்கைக்கான இரண்டாவது முறையான விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இதேவேளை, இந்திய பாதுகாப்பு செயலாளர் மற்றும் மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் கலந்துக்கொள்ளும் வலய ஒத்துழைப்பு தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீன உயர்மட்ட குழு நாட்டிற்கு வருகைத் தந்திருந்த பின்னணியிலேயே, இன்றைய தினம் இந்திய மற்றும் மாலைத்தீவு உயர்மட்ட இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்

You May also like