மேலும் 269 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும், டுபாயில் இருந்து 76 பேரும், கட்டாரின் டோஹா நகரில் இருந்து 47 பேரும் இவ்வாறு நாடுதிரும்பியுள்ளனர்.

அத்துடன், இந்தியாவின் சென்னை நகரில் இருந்து 45 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சவதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த 269 பேரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like