இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் மெஸன்ஜர் ஆகியன செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செயலணிகள், செயலிழந்துள்ளதாக பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
பிரித்தானிய நேரத்தில் 9.30 மணியளவில் இவை செயலிழந்துள்ளன.
52 வீதமான பயன்பாட்டாளர்களுக்கு தகவல்களை பரிமாறிக் கொள்வதில் சிரம நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
குறித்த செயலணிகளை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது