வவுனியா சிறையில் கைதி ஒருவருக்கு கொரோனா

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலையை சேர்ந்த குறித்த நபருக்கு கடந்த 12 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது.

இந் நிலையில் நேற்றைய தினம் பரிசோதனைக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பான ஏனைய நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

You May also like