இன்றுமுதல் பஸ்,வாகனங்களில் பயணிப்போருக்கு கொரோனா பரிசோதனை

கொழும்பு மாவட்டம் உட்பட மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று வெள்ளிக்கிழமை முதல் எழுமாறாக துரித அன்டிஜன் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

இதற்கமைய இன்று காலை 8 மணி முதல் இந்த நடைமுறை அமுல் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த துரித அன்டிஜன் பரிசோதனைகள் கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் கொஸ்கம மற்றும் சாலாவ பிரதேசத்திலும், கண்டி – கொழும்பு பிரதான வீதியின் நிட்டம்புவ பிரதேசத்திலும், கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் கட்டுநாயக்கவிலும் நடத்தப்படவுள்ளன.

பஸ்கள் உட்பட வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு எழுமாறான அடிப்படையில் இந்த பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

You May also like