குருநாகல், பொல்கஹவெல பிரதேசத்தில் மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
படலகம, பத்தாவ மற்றும் அழுத்கம ஆகிய பகுதிகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அழுத்கம பகுதியை சேர்ந்த 62 வயது பெண் கடந்த 16ம் திகதி சுகயீனம் காரணமாக
பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தார்.
இவருக்கு கடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.