பொகவந்தலாவையில் மாணவி உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று!

பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் உள்ளிட்ட மூவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டிக்கோயா பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே வவுனியாவில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் உட்பட இருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியல் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கும், வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் ஒன்று தொடக்கம் 5 வரையான ஒழுங்கைகள் மற்றும் வேப்பங்குளம் பின்பகுதி, குள வீதி, பட்டக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

You May also like