இலங்கை கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரர்களில் ஒருவரான செஹான் ஜயசூரிய தனது குடும்ப உறுப்பினர்களுடன் அமெரிக்காவுக்கு செல்கின்றார்.
இதனால் இலங்கை கிரிக்கெட் சபையினால் எதிர்வரும் காலத்தில் நடத்தப்படுகின்ற எந்தவொரு தொடரிலும் தாம் விளையாடப் போவதில்லை என்று விலகல் கடிதம் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை செஹான் ஜயசூரிய பிரபல முன்னாள் நடிகை ஒருவரை திருமணம் செய்திருப்பதாகவும், அவருக்கு அமெரிக்காவில் பிரஜாவுரிமை இருப்பதால் ஜயசூரிய அங்கு செல்கின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
செஹான் ஜயசூரிய 11 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருப்பதுடன், 20 ருவன்டி 16 போட்டிகளில் பங்கேற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.