கம்பஹாவில் பாரிய கொள்ளை:பொலிஸார் தீவிர விசாரணை

கம்பஹா − மிரிஸ்வத்த பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பாரிய கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவரினால் இந்த கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

40 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்காபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்த 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

You May also like