பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கொரோனா ஏற்பட்டதாகவோ அல்லது அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவோ வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
லங்காதீப வார இறுதிப்பத்திரிகையில் பிரதமர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி காணப்பட்டது.
எனினும் அதே பத்திரிகை இன்றைய தினம் அந்த செய்தியை திருத்தி பிரசுரித்திருக்கின்றது.
அதற்கமைய பிரதமர் தனிமைப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.