மேலும் 16 பேர் கைது!

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி பேணலை பின்பற்றாத 16 பேர் கைதாகியுள்ளனர்.

அத்துடன் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி முன்னெடுத்துச்செல்லப்பட்ட 71 அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பிரதி பொலிஸ் அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

You May also like