இலங்கையின் பிரதான முன்னணி பத்திரிகை நிறுவனமொன்றில் பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்வதற்கான உத்தரவினை பொதுசுகாதார அதிகாரிகள் விடுத்திருக்கின்றனர்.
அங்கு பலரும் முகக்கவசம் அணிந்திராமை, சுகாதார ஒழுக்க விதிமுறைகளை பின்பற்றாமை போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக அந்த ஊடக நிறுவனத்தின் செயற்பாட்டினை இரகசியமாக அவதானித்துவந்த பொது சுகாதார அதிகாரிகள், உடனடியாக அந்த நிறுவனத்தின் பல ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனையை நடத்தும்படி அறிவித்துள்ளனர்.
அதற்கமைய, இன்று முதல் வரும் 10 நாட்களுக்கு ஊழியர்கள் தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கை அடிப்படையில் வந்து பி.சி.ஆர் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கின்றனர் என தெரியவருகின்றது.
இதேவேளை நாட்டிலுள்ள மிகப்பெரிய ஊடக நிறுவனமொன்றின் உரிமையாளர் அண்மையில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில் அவரும் தனிமைப்படுத்தல் முகாமில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.