தெரிவுக்குழுத் தலைவராக மஹேல?

இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவரான அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்படவுள்ளார் என்கிற தகவல்கள் வைரலாகப் பரவியுள்ளன.

எனினும் அந்தத் தகவல்களை மஹேல ஜயவர்தன நிராகரித்திருக்கின்றார் என அறியமுடிகிறது.

தெரிவுக்குழுவின் தலைவர் பொறுப்பினை தாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது தேசிய விளையாட்டுச் சபையின் தலைவராக தாம் கடமைபுரிந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

எவ்வாறாயினும் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து அசந்த டி மெல் விலகியுள்ள நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You May also like