கோவிட் உடல்களை புதைக்க உத்தியோகபூர்வ அனுமதி இதுவரை இல்லை?

கொரோனா மரணங்களை புதைப்பதற்கு பிரதமர் அனுமதி வழங்கியதாக வௌியிடப்படும் செய்தி தவறானது என பிரதமர் அலுவலக முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தி லீடர் ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாராளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு ‘சடலங்களை புதைக்க அனுமதிக்கப்படும்’ என்றே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியதாகவும் கொரோனா சடலங்களை புதைக்க அனுமதிக்கப்படும் என்று கூறவில்லை எனவும் பிரதமர் அலுவலக முக்கியஸ்தர் விளக்கமளித்தார்.

ஆனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிப்பை பாகிஸ்தான் பிரதமர், அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

You May also like