சிறைச்சாலை பாதுகாப்பு கடமைகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர்
கொரோனா தொற்றுபரவல் காரணமாக தற்காலிகமாக விசேட அதிரடிப்படையினர் சேவையில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை, விளக்கமறியல் சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை ஆகிய சிறைச்சாலைகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்
இதற்கமைய கைதிகள், சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்கூடங்களில் விசேட அதிரடிப்படையினர் சோதனைகளை மேற்கொள்வார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
இதனிடையே வெலிக்கடை சிறைசசாலையில் இருந்து தப்பிச் செல்வதற்கு முயற்சித்த கைதியொருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த கைதி சிறைச்சாலை மதில் ஊடாக தப்பிச் செல்ல முயற்சித்த வேளை பாதகாப்பு அதிகாரியினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.